சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 319 பேருக்கு நாளை பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக இலவச  பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற தகுதித் தேர்வில்  வெற்றி பெற்ற 319 பேருக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ்

Updated On :12 மே 2013, 6:16 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக இலவச  பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற தகுதித் தேர்வில்  வெற்றி பெற்ற 319 பேருக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு செய்த நபர்களுக்கான தகுதித் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆட்சியர் மேலும் கூறியது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடைபெறவுள்ள பயிற்சி  வகுப்பில் கலந்துகொள்ள ஏப். 30 -ம் தேதி முதல் மே 9 -ம் தேதி வரை  முன்பதிவு செய்யப்பட்டது. இதில் 1,062 பேர் பதிவு செய்திருந்தனர்.

அதனடிப்படையில் பொதுத்தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்களில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 953 பேர் கலந்து கொண்டு தேர்வு  எழுதினர்.

தகுதித் தேர்வு விடைத்தாள்கள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு பெற்ற 319 பேரின் பெயர்கள் பதிவு எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மைய நூலகம், வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள விளம்பரப் பலகையில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒட்டப்பட்டன.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளன.

இதுகுறித்து விவரம் அறிந்துகொள்ள 98943-93970, 99430-88022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.