அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆட்சியரகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், படித்த மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக். 14) நடைபெற உள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:53 pm

DIN

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், படித்த மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக். 14) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் சென்னை,  திருச்சி, திருப்பூர், கோவை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள எஸ்.எஸ். டெக்னோவேஷன், வேவ்ஸ் குரூப், மகேந்திரா டீலர் ஷிப், ஐ.சி.ஐ.சி.ஐ அகாதெமி, எம்.ஆர்.எப். லிமிடெட்,  கிளாசிக் போலோ, டி.வி.எஸ் டெய்னிங், எல்.ஐ.சி நிறுவனம், க்ளோ டெக்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதற்கான நேர்காணலில் 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்த 18 முதல் 35 வரையுள்ளஆண், பெண்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல், நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.