சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெரம்பலூரில் அம்மா உணவகம் சூறை

பெரம்பலூரில் அம்மா உணவகம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:58 am

DIN

பெரம்பலூரில் அம்மா உணவகம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு, வழக்கம்போல் சமையல் செய்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் சிலர் வியாழக்கிழமை அதிகாலையில் வந்தபோது, பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும்,  உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியல், திறப்பு விழா ஆகியவற்றின் பேனர்களில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.  
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று சேதப்படுத்தப்பட்ட பொருள்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.