சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:26 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அ10 மாதங்களாக வேலையில்லாமல் இருக்கும் அனைத்து புதுவாழ்வுத் திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 12 ஆண்டு  அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு டிஎன்ஆர்டிபி திட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து  பணியாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும்.  2017 ஜூன் முதல் 2018 மார்ச் வரை வேலையில்லாமல் இருக்கும் புதுவாழ்வுத் திட்ட பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து கணக்காளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10  ஆயிரம் வழங்க வேண்டும். அரியலூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய பின்தங்கிய மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவர் ஆ.பெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.