வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :21 மே 2018, 9:20 pm

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இட நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த 25.5.1985- இல்அப்போதைய முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், தமிழக அரசால் 4.41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 1.99 ஏக்கர் நிலத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2013 ஆம் ஆண்டில் ஆதிதிராவிட இன மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வயலப்பாடி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர் சி. தமிழ்மாணிக்கம், மாநில நிர்வாகி வீர. செங்கோலன், மதிமுக மாவட்ட செயலர் சி. துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் காமாட்சி அங்குசென்று, பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதில், சம்பந்தப்பட்ட இடத்துக்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஒரு வார காலத்துக்குள் உரிய தீர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.