பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மகன் திட்டியதால் விஷம் குடித்து தாய் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி கமலம் (55). இவருக்கு, துரைராஜ், ராஜேந்திரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கமலம் ராஜேந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மகன் துரைராஜ், மது போதையில் தாய் கமலத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை தாயாரிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கமலம் விஷம் குடித்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

