சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் சாவு

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன், மனைவி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சீதேவிமங்கலம்

Updated On :25 மே 2018, 4:11 am IST

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன், மனைவி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சீதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (6). இவரது மனைவி சங்கீதா (45). இருவரும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர், புதன்கிழமை மாலை சொந்த கிராமத்துக்கு செல்வதற்காக, மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பலத்த காயமடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த சுஜீத் சந்திரனை (40) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.