எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மதிப்புக் கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

நீடித்த மானாவாரி இயக்கத்தின் கீழ், வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைப்பதற்கு

Updated On :8 அக்டோபர் 2018, 8:44 am IST

நீடித்த மானாவாரி இயக்கத்தின் கீழ், வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைப்பதற்கு தகுதியான உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உற்பத்தியாளர் குழுவினர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் கல்பாடி, பேரளி ஆகிய இடங்களில் மதிப்புக்கூட்டு இயந்திர மையம் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது தேவைக்கு இந்த மையங்களை அணுகி மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருள்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல, நடப்பு நிதியாண்டிலும் 2 ஆம் கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 4 மதிப்புக்கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டுக் குழு, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு விண்ணப்பத்தை பரிந்துரை செய்யும். 
பின்னர், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் பெறப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செயற்பொறியாளரால் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கிட பணியாணை வழங்கப்படும். இயந்திரங்கள் வழங்கப்பட்டு, மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் நிறுவப்பட்ட பின் ஆய்வு செய்யப்பட்டு இயந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறது என்ற அறிக்கை பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொகுப்பு மேம்பாட்டக் குழு மூலம் மானியத்தொகை விடுவிக்கப்படும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்களது விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவுக்கு அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.