பெரம்பலூர் மாவட்டத்தில் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப் பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பரிசு பெற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல் மற்றும் 2-ஆம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரமும், ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் ஏற்கெனவே பெறப்பட்ட ஆவணங்களின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 1,200-க்கு 1,034 மதிப்பெண்களும், இரண்டாம் மதிப்பெண் 1,200-க்கு 1,028 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். எனவே, பிளஸ் 2 தேர்ச்சியுற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மேற்கண்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அக். 15-க்குள் அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









