தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் மணி, பொருளாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய முதல்வரின் செயலைக் கண்டிப்பது.
சங்க பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு, ஆசிரியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

