சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு  பட்டதாரி  ஆசிரியர் கழகம் நன்றி

தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:16 am

தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் மணி, பொருளாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். 
தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய முதல்வரின் செயலைக் கண்டிப்பது. 
சங்க பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு, ஆசிரியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.