சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் மீட்பு

பெரம்பலூர் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் குழந்தை தொழிலாளராக பணிபுரிந்த 13 வயது சிறுமியை

Updated On :13 பிப்ரவரி 2019, 9:20 am IST

பெரம்பலூர் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் குழந்தை தொழிலாளராக பணிபுரிந்த 13 வயது சிறுமியை குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் அண்மையில் மீட்டனர். 
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஜே.ஏ. முகமது யூசுப் தலைமையில், குழந்தை பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் உளிட்ட பல்வேறு பகுதியில் இயங்கி வரும்  நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், பெரம்பலூர் மேட்டுத் தெருவில் உள்ள ரெடிமேட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பள்ளிப் படிப்பை நிறுத்திய 13 வயது சிறுமி பணியில் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த சிறுமியை மீட்டு குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பள்ளிப் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவியை பணியமர்த்திய நிறுவன உரிமையாளரின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பணிக்கு அமர்த்தியிருப்பது தெரிந்தால், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை 275722 மற்றும் 1098 எனும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.