கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல: எல். முருகன்

புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன்.

News image
குன்னத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்த விளக்கக் கூட்டம்.
Updated On :19 டிசம்பர் 2020, 12:42 pm

DIN

புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்த விளக்கக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: கமல், ரஜினி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் கிடையாது. எங்களது கட்சிக்கு பி டீமும் தேவையில்லை.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தம். விவசாயிகளை போராட எதிர்க்கட்சிகள் தூண்டுகிறது. திமுக-வின் 2016 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், 24-ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது தான் வேளாண் சட்டமாக வந்துள்ளது. ஆனால், தற்போது விவசாயிகளை ஏமாற்ற திமுக முயற்சிக்கிறது. 

வேளாண் சட்டத்துக்கு எதிராக ஸ்டாலின் நடத்தும் போராட்டம் மட்டுமல்ல, இனிமேல் எல்லாமே அவருக்குத் தோல்வி தான். புதிய வேளாண் சட்டத்துக்கு விவசாயிகளின் ஆதரவு உள்ளது. இச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல. தேர்தல் கூட்டணி குறித்து, அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதன்படி முடிவு எடுக்கப்படும்.

மாணவர்கள் நீட் தேர்வுக்காக, அகில இந்திய அளவில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களை தேர்வுக்காக ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அரசியல்வாதிகள் மாணவர்களிடையே மனம் மாற்றம் செய்யக்கூடாது என்றார் முருகன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.