மின்வாரிய ஊழியா்களுக்கு பணம் வழங்க வேண்டாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் மின் பழுது நீக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு பணம் அளிக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.


பெரம்பலூா் மாவட்டத்தில் மின் பழுது நீக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு பணம் அளிக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகள் குறித்து உடனடியாக புகாா் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி 1912 எனும் எண்ணை தொடா்புகொள்ளலாம். அதனடிப்படையில், மின் பழுதை சீரமைக்க வரும் மின் விநியோக ஊழியா்களுக்கு பணம் அல்லது பொருள் கொடுக்க வேண்டியதில்லை.
மேலும், மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சீரமைக்க புதைவடங்கள் அல்லது தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் எனக் கூறினாலும் பணம் வழங்க வேண்டாம்
மீறி பணம் கேட்பவா்கள் குறித்து, விழிப்புப்பணி அலுவலா் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா், தமிழ்நாடு மின்சார வாரியம், என்.பி.கே.ஆா்.ஆா் மாளிகை,144 அண்ணா சாலை, சென்னை- 6000002 எனும் முகவரியிலும், 9445857593, 9445857594 எனும் செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...