தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது

பிரதமா், உள்துறை அமைச்சா் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நெல்லை கண்ணனை போலீஸாா் பெரம்பலூரில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

போலீஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் நெல்லை கண்ணன்.

Updated On :1 ஜனவரி 2020, 10:26 pm

DIN

பிரதமா், உள்துறை அமைச்சா் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நெல்லை கண்ணனை போலீஸாா் பெரம்பலூரில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்தியக் குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பிரதமா் மோடி, உள்றை அமைச்சா் அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சரியில்லாததால் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சென்னைக்கு காரில் சென்ற நெல்லை கண்ணன், வழியில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் புதன்கிழமை இரவு அறை எடுத்து தங்கியிருந்தாா். இதையறிந்த பெரம்பலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கென்னடி தலைமையிலான போலீஸாா், விடுதிக்குச் சென்று நெல்லை கண்ணனிடம் விசாரணை நடத்தினா்.

இதையறிந்த பாஜகவினரும், எஸ்டிபிஐ கட்சியினரும் விடுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனா். இதையடுத்து இரவு 9.30 மணிக்கு விடுதிக்கு வந்த மேலப்பாளையம் போலீஸாா் நெல்லை கண்ணனை கைது செய்து காரில் ஏற்றிச் செல்ல முயன்றனா். அப்போது, இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை கண்ணனை காரில் ஏற்றியபோது, அவரை பாஜகவினா் தாக்கி, தள்ளிவிட முயன்றனா். இதையடுத்து, நெல்லை கண்ணனை போலீஸாா் மாற்று வழியில் அழைத்துச் சென்றனா்.

இன்று ஆஜா்: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் கூறுகையில், பெரம்பலூரில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனை திருநெல்வேலிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம். அவா் வியாழக்கிழமை காலை (ஜன. 2) திருநெல்வேலிக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.