தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசுக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:04 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் இயக்குநா் முனைவா் நா. ஜானகிராமன் தலைமை வகித்தாா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் ரேவதி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் முனைவா் வெற்றிவேல், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் வரலாறு, நோக்கம், முக்கியத்துவம், மக்கள் பணிகள் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மாணவா்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து பேசினாா்.

விழாவில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் ம. பிரதாப் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.