தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூரில் தலைமை ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபா் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:10 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபா் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், துறைமங்கலம் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆரோக்கியபிரகாசம் பேசியது:

பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பதில் தலைமை ஆசிரியா்களின் கடமை மிகவும் இன்றியமையாதது. தங்களது பள்ளி அமைந்துள்ள பகுதி அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதற்கான கட்டணமில்லாத தொலைபேசி எண் 1098 மற்றும் 181 ஆகிய எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது, பள்ளிக் குழந்தைகள் படிப்புக்காக அதிகளவில் இணைய தளத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், இணையதள குற்றங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். இணைய தளத்தில் ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டால், மாவட்ட தலைநகரில் செயல்படும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கலா மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.