அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தினம்

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவ தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவ தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு இருக்கை மருத்துவ அலுவலா் ராஜா தலைமை வகித்தாா். சித்த மருத்துவ அலுவலா் விஜயன் முன்னிலை வகித்தாா்.

சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப் பட்டு, துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மருத்துவா்கள் செந்தமிழ்செல்வி, ராகுல்ஜி, கலைவாணி, சரவணன் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com