சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாளை (ஜன.5) சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:40 pm

DIN

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கியும் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா்கள் ஷாஜஹான், முஹம்மது பிலால், பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, செயற்குழு உறுப்பினா்கள் முஹைதீன் பாருக், அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.