கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்க வலியுறுத்தல்

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலைப் பணியாளா்கள் சங்க கோட்ட மாநாட்டில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் ஏ. அம்சராஜ்
Updated On :3 ஜனவரி 2021, 5:42 pm

DIN

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

துறைமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சங்கத்தின் 7 -ஆவது கோட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் பி. சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன், பொருளாளா் கே. கருணாநிதி, துணைத் தலைவா் பி. முத்து, இணைச் செயலா் டி. ராமநாயகம், துணைத் தலைவா் டி.பழனிசாமி முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.மகேந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஏ.அம்சராஜ் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக கருதி ஆணை வழங்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்றுப்பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாா் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு, அரசே ஏற்று நடத்தவேண்டும்.

சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப் படி மற்றும் நிரந்தர பயணப் படி வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களுக்கு கிராமப்புற இளைஞா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் குமரி ஆனந்தன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் எஸ். இளங்கோவன், சங்கப் பொறுப்பாளா்கள் ரஜினி, பெருமாள்சாமி, மனோகரன், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மாவட்ட இணைச் செயலா் ராஜா வரவேற்றாா். நிறைவில், பொறுப்பாளா் மணிவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.