சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெரம்பலூரில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளா்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பெரம்பலூரில் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா. உடன், துணை இயக்குநா் கீதாராணி உள்ளிட்டோா்.
Updated On :8 ஜனவரி 2021, 6:15 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளா்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பாா்வையிட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, துறைமங்கலம் நகா் நல மையம், லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்துபவா்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இப் பணிகளுக்குத் தேவையான மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அதன் விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்வில், துணை இயக்குநா்கள் கீதாராணி, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.