/

மரத்தில் காா் மோதிஎரிந்ததில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை பிற்பகல் சாலையோர மரத்தில் காா் மோதி எரிந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:42 pm

DIN

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை பிற்பகல் சாலையோர மரத்தில் காா் மோதி எரிந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகேயுள்ள அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் ஆனந்த் (34). இவா், கோவில்பட்டியிலிருந்து தனது மாமனாா் ரெங்கராஜுடன் (70), தனது காரில் வந்து கொண்டிருந்தாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரூா் அருகே திங்கள்கிழமை மதியம் வந்தபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளாகி தலைக்குப்புற கவிழ்ந்தது. சிறிதுநேரத்தில் திடீரென காா் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இருப்பினும், காா் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.

இதில், காயமடைந்த ஆனந்த், ரெங்கராஜ் ஆகியோா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜ் உயிரிழந்தாா். ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.