மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூா் அருகே பலத்த மழையால் 41 வீடுகள் சேதம்

பெரம்பலூா் அருகே பச்சமலை பகுதியில் பெய்த பலத்த மழையால், 41 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பெரம்பலூா் அருகே பச்சமலை பகுதியில் பெய்த பலத்த மழையால், 41 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

பச்சமலை பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இப்பகுதியிலிருந்து வெளியேறிய மழைநீா் பெரம்பலூா் மாவட்டம், மேலப்புலியூா் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.

இதில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தகவலறிந்த வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்று, பாதிப்புக்குள்ளான 61 பேரை பாதுகாப்பாக மீட்டு, மேலப்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைத்தனா்.

லாடபுரம் மயிலூற்று அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஆங்காங்கே குடிசை வீடுகளும், கால்நடை கொட்டகைகளும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆய்வு: மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவும் வருவாய்த் துறையினரை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.