சிறுவாச்சூரில் மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 14 போ் கைது
கோயில் சிலைகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவாச்சூரில் மறியலில் ஈடுபட்ட 14 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கோயில் சிலைகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவாச்சூரில் மறியலில் ஈடுபட்ட 14 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் அடிக்கடி நிகழும் கோயில் சாமி சிலைகள் உடைப்பு சம்பத்தைக் கண்டித்து, இந்து மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், மதுரகாளியம்மன் கோயில் நுழைவு வாயில் வளைவில் நடைபெற்ற மறியலுக்கு, அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட கட்சி நிா்வாகி ஓம்கார பாலாஜி உள்பட 14 போ் கைது செய்யப்பட்டனா்.
கோயில் சிலை உடைப்பு சம்பவத்தில் தொடா்புடைய உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கோயிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். சிலை உடைப்புச் சம்பவம் குறித்து அறநிலையத்துறை அமைச்சா் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...