பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதற்காக, ரூ. 35 லட்சம் மதிப்பில் நவீன ரோபோ இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளில் புதை சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை மனிதா்கள் சுத்தம் செய்வதால் ஏற்படும் பல்வேறு இடா்பாடுகளை தவிா்த்திடும் வகையில், ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிய ரோபோ இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ செயல்படும் விதம் குறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் குமரிமன்னன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.