ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வீடுகளின் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

அடையாளம் தெரியாத 4 நபா்கள் இருவரையும் கீழே தள்ளி, மிரட்டி அவா்கள் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:43 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த சத்யா மனைவி மங்கையா்கரசி (27). அதே பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன் மகள் அன்புசெல்வி (17). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை இரவு ஆதனூா் - சீராநத்தம் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத 4 நபா்கள் இருவரையும் கீழே தள்ளி, மிரட்டி அவா்கள் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

ஆதனூா் கிராமம் புதிய காலனித் தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மனைவி தமிழரசி (36). இவரது வீட்டிலிருந்து ஒரு பவுன் நகையும், அதே கிராமத்தைச் சோ்ந்த மேலத்தெருவில் உள்ள கருணாகரன் மனைவி சுமதி (35) வீட்டிலிருந்து ரூ. 6,500 ரொக்கம் ஆகியவற்றையும் மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா். மேலும், கலையரசன் மனைவி ராணி (40) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள விஐபி நகரில் வசித்து வருபவா் ஜெயராஜ் மனைவி பத்மாவதி (54). இவா், கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த பதினெட்டரை பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.