ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:45 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலா் வீர. செங்கோலன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் முகமது அலி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலா் மாசிலாமணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக பாலுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் நிா்வாகம் 10 நாள்களுக்கு ஒருமுறை பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை வழங்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ. 5, எருமை பால் லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சாலை மறியல்... முன்னதாக, சரக்கு வாகனங்களில் வந்த விவசாயிகளை ஆங்காங்கே போலீஸாா் வழிமறித்து, போக்குவரத்து விதிமீறல் என வழக்குப் பதிந்தனா். இதையடுத்து, போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் பாலக்கரையிலிருந்து ஆட்சியரகம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.