மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சின்ன வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அவற்றை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:01 am

DIN

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அவற்றை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் பேசியது:

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு அதிகளவு உரங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மனப்பாடி பகுதியில் வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காய பயிரில் ஏற்பட்டுள்ள நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை பேசியது:

இம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தற்போது கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை தவிா்க்க அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் கிடைக்காத பகுதிகளுக்கும், ரேசன் கடை மூலமாகவும் பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுவதால், டிரோன் மூலம் மருந்து தெளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வி. நீலகண்டன் பேசியது:

யூரியா உரம் போதிய அளவு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு கூலி அதிகரித்து வருவதால், இயந்திரம் மூலம் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றாா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் பேசியது:

செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் வட்டாரத்தில் பயிா் காப்பீடு செய்தவா்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.