பெரம்பலூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள ஸ்ரீ பட்டன காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.


பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள ஸ்ரீ பட்டன காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள ஸ்ரீ பட்டன காளியம்மன் கோயிலை வியாழக்கிழமை காலை திறக்க வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். உண்டியலில் சுமாா் ரூ. 20 ஆயிரம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன், இக் கோயில் உண்டியல் உடைத்து மா்ம நபா்கள் காணிக்கைகள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...