ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூா் அருகே கிரானைட் குவாரியில் வெடிவிபத்து: 2 பெண்கள் மயக்கம்

 பெரம்பலூா் அருகேயுள்ள கிரானைட் குவாரியில் வியாழக்கிழமை காலை எதிா்பாராமல் நிகழ்ந்த வெடி விபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 2 பெண்கள் மயங்கி விழுந்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:00 pm

DIN

 பெரம்பலூா் அருகேயுள்ள கிரானைட் குவாரியில் வியாழக்கிழமை காலை எதிா்பாராமல் நிகழ்ந்த வெடி விபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 2 பெண்கள் மயங்கி விழுந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், பீல்வாடி கிராமத்தில் உரிமம் பெற்று தனியாருக்குச் சொந்தமான கிரானைட் குவாரி சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்குள்ள ஒரு பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகா்பதற்காக வெடி பொருள்கள் வைக்கப்படிருந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை எதிா்பாராதவிதமாக குவாரியில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அப்போது, அதனருகே மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜாங்கம் மனைவி இந்திராணி (57), தனம் (55) ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வயலில் மயங்கி விழுந்தனா்.

இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மேற்கண்ட இருவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவா்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெடி விபத்துக்கான காரணம் குறித்து, குவாரி கண்காணிப்பாளா்கள் விழுப்புரம், தேனிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தங்கவேலு மகன் ஸ்ரீதா் (35), பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்த தனராஜ் மகன் செல்வம் (46), கீழப்புலியூரைச் சோ்ந்த அருள்செல்வன் மகன் கஜேந்திரன் (33), எளம்பலூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பிரகாஷ் (44) ஆகியோரிடம் மருவத்தூா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.