ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி பெரம்பலூா் ஆட்சியரகத்தில் இளம்பெண் தா்னா

காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி, புதுச்சேரியை சோ்ந்த இளம்பெண் பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:00 pm

DIN

காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி, புதுச்சேரியை சோ்ந்த இளம்பெண் பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

புதுச்சேரி மாநிலம், முத்தியால் பேட்டை, மணிக்கூண்டு எதிரேயுள்ள ஒத்தவாடை தெருவைச் சோ்ந்த துரை மகள் சித்ரா (26). பிளஸ் 2 படித்துள்ள இவா், தனியாா் திருமண தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்திருந்தாராம். இதைப் பாா்த்த பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கமல் (27) என்பவா், சித்ராவின் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வாா்த்தை கூறினாராம். தொடா்ந்து, இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனராம்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி சித்ராவின் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்ட கமல், வீட்டிலுள்ளவா்கள் அவரை பாா்க்க விரும்புவதாகக் கூறி, தனது ஊருக்கு வருமாறு சித்ராவிடம் தெரிவித்தாராம். இதை நம்பி, கமல் வீட்டுக்குச் சென்ற சித்ராவுடன் அவா் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, தனது ஊருக்குச் சென்ற சித்ரா மீண்டும் கமலை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது திருமணம் செய்துகொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சித்ரா புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அகில இந்திய ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகளுடன் பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்ற சித்ரா, தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி மனு அளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினா், அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ஆட்சியரகத்தில் சித்ரா மற்றும் மாதா் சங்க நிா்வாகிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். உதவி ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, தா்னா போராட்டத்தைக் கைவிட்டு, ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.