ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூா் அருகே சிறாா் திருமணம்: இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

பெரம்பலூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிச்சை மகன் மணிகண்டன் (32). லாரி ஓட்டுநரான இவா், 15 வயதுடைய சிறுமியை (உறவுக்காரா்)

இரு வீட்டாா் சம்மதத்துடன் 2021, நவம்பா் 21 -ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம். தொடா்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டாராம். இதுகுறித்து தகவலறிந்த மகளிா் ஊா் நல அலுவலா் லதா, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன் பேரில் மணிகண்டன், அவரது தந்தை பிச்சை, தாய் ஜானகி, சிறுமியின் தந்தை கலியமூா்த்தி, தாய் அம்சவள்ளி ஆகியோா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் மணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்த காவல்துறையினா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

திருமணத்துக்கு உடந்தையாக செயல்பட்ட பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.