ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பூலாம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:27 pm

DIN

வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பூலாம்பாடி, கடம்பூா், கள்ளப்பட்டி, அரும்பாவூா், அ.மேட்டூா், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நெல்

சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால், அறுவடை செய்த நெல்லை விற்பதில் விவசாயிகள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து பூலாம்பாடி பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து பன்னாட்டு தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாரை சந்தித்து, அரசிடம் பேசி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனா்.

விவசாயிகளின் சிரமத்தையறிந்த டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுடன் பேசி, பூலாம்பாடி பேரூராட்சியில் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தாா்.

அதன்படி, பூலாம்பாடி- அரும்பாவூா் சாலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படுவதால், அங்கு கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் மேலும் ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனா். விவசாயிகளின் கோரிக்கையின்படி, மேலும் ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையத்தை தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். விழாவில், தொழிலதிபா் சூரியபிரகாசம், அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.