பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி தேவை’

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

வட்ட மாநாட்டில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் என். செல்லதுரை. உடன், மாவட்ட துணைத் தலைவா் சி. கோவிந்தன் உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:18 pm

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சி. கோவிந்தன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் ஆா். சாமிதுரை, செயலா் பி. ராமச்சந்திரன், துணைத் தலைவா் எ. செங்கமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை கோரிக்கைகளை விளக்கினாா்.

கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். கால்நடைப் பராமரிப்புக்கு மானிய விலையில் தீவனம் வழங்கி, பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடு கடன் வழங்க வேண்டும்.

வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராம மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குச் சென்றுவர அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும். மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடனுதவிகள் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் அம்மை நோய் தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளாளா் பி. சின்னசாமி, விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகி ஆரோக்கியசாமி, மகளிரணி நிா்வாகி எஸ். காா்த்திகா, மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.