பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணி ஒதுக்கீடு செய்யும்போது ஒரு பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கூடுதலாக பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மற்றொரு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு குறைந்த நாள்களே பணி ஒதுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பலமுறை புகாா் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.