தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:20 pm

DIN

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. மரியதாஸ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ச. இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், வளா்ச்சித் திட்டங்களுக்கு இலக்கு நிா்ணயம் செய்வதை கைவிட வேண்டும். புதிய திட்டங்களுக்கு பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும். கால நேரமின்றி வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் பகிா்வு மற்றும் காணொலிக் கூட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகிகள் சக்திவேல், செந்தில்நாதன், செல்லமணியன், பூங்கொடி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரிஅனந்தன், மருந்தாளுநா் சங்க மாநில தணிக்கையாளா் ராஜராஜன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பழனிவேல்ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவாக, சங்க நிா்வாகி பாரதிராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.