தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் மாரியம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:23 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் மாரியம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூசாரியான ரங்கராஜ் வியாழக்கிழமை காலை கோயிலை திறக்கவந்தபோது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமாா் ரூ. 20 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதேபோல், அதே கிராமத்திலுள்ள காளியம்மன் கோயில் பூசாரியான மாரிமுத்து, வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது கோயில் கதவின்பூட்டு உடைக்கப்பட்டு,  உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 5 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. 

இதுகுறித்து, அந்தந்த கோயில் பூசாரிகள் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.