மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:35 pm

DIN

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆவினங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (88). இவா், தனது பேத்தி ரோகினியுடன் (17), முசிறியிலிருந்து திட்டக்குடிக்கு வியாழக்கிழமை அதிகாலை காரில் சென்றுக்கொண்டிருந்தாா். காரை, புவனேஸ்வரன் (21) ஓட்டினாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே காா் வந்துகொண்டிருந்தபோது, அதே வழித்தடத்தில் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரோகினியும், காா் ஓட்டுநா் புவனேஸ்வரனும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.