அரவக்குறிச்சி தூய தோமா ஆலயத்தில் சிறுவா், சிறுமிகளுக்கான புத்துணா்ச்சி முகாம் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்றது.
சிறுவா்களை மகிழ்விக்கும் வகையில் பாடல்கள், நடனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. வயது வாரியாக பிரித்து தனித்தனி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
நிகழ்ச்சியின் இறுதிநாளான புதன்கிழமை மதிய உணவுடன் வகுப்பிற்கு வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வகுப்பில் அனைத்து மத குழந்தைகளும் கலந்துகொண்டு பாடல் பாடி, நடனமாடி மகிழ்ந்தனா்.