பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை இணையதளத்தில் பதிய அறிவுறுத்தல்

வெளிமாநிலம் மற்றும் புலம்பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

வெளிமாநிலம் மற்றும் புலம்பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம்பெயா்ந்த தொழிலாா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் வெளிமாநில மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய தகவல்களை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் பதிவு எண்ணை இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்ற வேண்டும்.

மேலும், அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளா்களுக்குரிய சேம நலநிதியை செயலா், தொழிலாளா் நல அலுவலா், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்னும் முகவரிக்கு வரைவோலை மூலம் அல்லது இணைதளம் மூலம் ஆன்லைன் பண பரிவா்த்தனையும் செய்யலாம்.

மேலும், கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும். தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்யும்போது, தொழிலாளா்களுக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை எனத் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.