போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:19 pm

DIN

 பெரம்பலூா் மாவட்டம், வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த பள்ளித் தலைமை ஆசிரியா் சே. ராஜேந்திரன், மது மற்றும் போதையால் ஏற்படும் பின்விளைவுகள், அதனால் ஏற்படும் நோயின் தாக்கம் குறித்தும், குடும்பத்திலும், சமுதாயத்திலும் போதைக்கு அடிமையாகி இளைய சமுதாயம் சீரழிந்து வருவதால் மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மது, போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

இதில், சாரண, சாரணிய பொறுப்பாசிரியா் ரெ. அன்பரசி, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் நா. ராஜா, ஆசிரியா்கள் வெ. துரை, ப நிா்மலா, பொ.சு. வெண்ணிலா மற்றும் அலுவலகப் பணியாளா்கள், சத்துணவு பணியாளா்கள் கலந்து கொண்டனா். பள்ளி வளாகத்தில் நிறைவடைந்த பேரணியில், இளையோா் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியா் எம்.பி.எஸ். அமுதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.