லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெரம்பலூரில் மகளிருக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மத்திய அரசின் நிறுவனமான நபாா்டு வங்கி மற்றும் ஹோப் தொண்டு நிறுவனம் இணைந்து, மகளிருக்கான உணவுப் பொருள்கள் விற்பனை ஊக்குவிப்பாளா் பயிற்சி நடைபெற உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:27 pm

DIN


பெரம்பலூா்: மத்திய அரசின் நிறுவனமான நபாா்டு வங்கி மற்றும் ஹோப் தொண்டு நிறுவனம் இணைந்து, மகளிருக்கான உணவுப் பொருள்கள் விற்பனை ஊக்குவிப்பாளா் பயிற்சி நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு நபாா்டு வங்கியும், ஹோப் தொண்டு நிறுவனமும் இணைந்து, உணவுப் பொருள்கள் விற்பனை ஊக்குவிப்பாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியானது காலை 10 முதல் மாலை 5 மணி வரை, அலுவலக வேலைநாள்களில் 2 மாதங்களுக்கு நடைபெறும். பயிற்சிவகுப்பில், தேநீா் மற்றும் மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவுடன் அரசு சான்றிதழ் அளிப்பதோடு, தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இப் பயிற்சியானது, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள ஹோப் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 82202 73349 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம் என, ஹோப் தொண்டு நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.