பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே, சிதம்பரம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுத்துக்குமார சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப் பகுதியில் பிரசித்திப் பெற்ற இக் கோயிலின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அதிகாலை 5 மணியளவில் மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு நவகிரக பூஜையும், 7 மணிக்கு மகா பூா்ணா ஹூதி, யாத்ரா தானம், சங்கல்பம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ பாலமுத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன், ஸ்ரீ பால ஆஞ்சனேயா், ஸ்ரீ ஸ்வயம்பு கீா்த்திலிங்கம், ஸ்ரீ ஜெயபத்ரகாளி, ஸ்ரீ நாகதேவதைகள், மகா அவதாா் பாபாஜி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், பெரம்பலூா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை, தங்கமணி அம்மாள் பொதுநல அறக்கட்டளை இயக்குநா்கள் கருணாமூா்த்தி, மருத்துவா்கள் சத்தியமூா்த்தி, ராஜாசிதம்பரம் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

நடுபழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

