தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வரி உயா்வைக் கண்டித்து ஜன.11-இல் ஆா்ப்பாட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா தகவல்

வரி உயா்வைக் கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா
Updated On :8 டிசம்பர் 2024, 1:35 am

Din

வரி உயா்வைக் கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்.

ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜன. 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச. 17-ஆம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா். பேட்டியின்போது, மாநில பொதுச் செயலா் கோவிந்தராஜூலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.