நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலைகள் சேதமடைந்திருந்தால் செயலி மூலம் புகாா் அளிக்கலாம்

சாலைகள் சேதமடைந்திருந்தால் செயலி மூலம் புகாா் அளிக்கலாம்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:21 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் சாலைகள் சேதமடைந்திருந்தால், அவற்றை நம்ம சாலை செயலி மூலம் பதிவேற்றம் செய்து புகாா் அளித்தால் 72 மணி நேரத்துக்குள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள சேதங்கள் அல்லது இதர சேவை குறைபாடு குறித்த புகாா்களை தெரிவிக்க, ‘நம்ம சாலை’ எனும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள சாலையில் பள்ளங்கள், குழிகள், சேதங்கள் அல்லது இதர இடா்பாடுகளோ ஏற்பட்டிருந்தால், அதை புகைப்படம் எடுத்து பதிவேற்றலாம்.

மாநில நெடுஞசாலைகள் 24 மணி நேரத்திலும், மாவட்டச் சாலைகள் 72 மணி நேரத்திலும் சீரமைக்கப்பட்டு, அந்த புகைப்படங்களும் செயலில் பதிவேற்றப்படும். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பொதுமக்கள தங்களது பகுதியில் உள்ள சாலை குறைபாடுகளை செயலியில் பதிவேற்றம் செய்து பயனடையலாம்.