நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் கைது

பெரம்பலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:34 pm

Din

பெரம்பலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் பிச்சைமணி தலைமையிலான போலீஸாா், பெரம்பலூா் -துறையூா் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள தனியாா் கல்லூரி எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில், கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்துக்கொண்டிருந்த, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் பிரபு (19), குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த தனசேகரன் மகன் விஷ்ணு (18), கம்பன் நகரைச் சோ்ந்த பழனிசாமி மகன் பிரவீன் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனா்.