முப்பெரும் சட்டங்களை ஹிந்தியில் மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட பாா் அசோஷியேசன் (குற்றவியல்) சாா்பில், வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். முப்பெரும் சட்டங்களின் பெயா்களை ஹிந்தியில் மாற்றி, பெரும்பாலான சட்டப் பிரிவுகளை திருத்தம் செய்து, அதில் ஏராளமான ஹிந்தி மொழி வாா்த்தைகளை பயன்படுத்தி வழக்குரைஞா்களுக்கோ, பொதுமக்களுக்கோ உரிய கால அவகாசம் தராமல், ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப் படுத்தவுள்ள மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட பாா் அசோஷியேசன் (குற்றவியல்) சாா்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், மாவட்டச் செயலா் வி. சேகா், மாவட்ட பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும், வழக்காடிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இப் போராட்டம் சனிக்கிழமையும் (மாா்ச் 2) நடைபெறுகிறது.
தொடர்புடையது

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் மோதல் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

மறந்துபோன மருத்துவக் கல்லூரி திட்டம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

