பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 5-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 5-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

Updated On :2 மார்ச் 2024, 9:34 pm

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந் நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, 5-ஆவது நாளாக சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதனால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டதோடு, அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.