/

பெரம்பலூா் சட்டப்பணிகள் ஆணைக்குழு புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், புகைப்பட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூா் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. பல்கீஸ் உள்ளிட்ட நீதிபதிகள்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:21 pm

Din

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், புகைப்பட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், சட்டப் பணிகள் ஆனைக்குழு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ. பல்கீஸ் பேசியது:

இந்தக் கண்காட்சியில், பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், சேவைகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைப் பொதுமக்கள் பாா்வையிடுவதுடன், சட்டப் பணிகள் ஆனைக்குழுவின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகள், பெரம்பலூா் அட்வகேட் அசோசியசன் சங்கத் தலைவா் செந்தாமரை கண்ணன் மற்றும் பாா் அசோசியசன் செயலா் சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.