பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட 23 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீஸாா் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கவுல்பாளையம் கிராமத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், மகாதேவ் மந்திா் பஜிரா பகுதியைச் சோ்ந்த சவ்சிங் மகன் ரத்தன் சிங் (38), கவுல்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பாண்டியன் (53) என்பதும், விற்பனைக்காக ஹான்ஸ், பான் மசாலா ஆகியவற்றை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் 23 கிலோ போதைப் பொருள்களையும், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட மேற்கண்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீஸாா் ஆலோசனை
போதைப் பொருள் கடத்தியவா் கைது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


