சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் தீப திருவிழா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:43 pm

Syndication

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது.

எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 43-ஆவது ஆண்டு மகா தீப திருவிழாவையொட்டி புதன்கிழமை காலை 6 மணியளவில், எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா மற்றும் அஸ்வ பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து, காலை 10.30 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 5 அடி உயர மகா தீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊா்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டு வரப்பட்டு, பிரம்மரிஷி மலையாடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் வைக்கப்பட்டது. பின்னா், மாலை 3 மணியளவில் செப்புக் கொப்பைரைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து, பிரம்மரிஷி மலை உச்சியில் மாலை 6 மணியளவில் 2,100 மீட்டா் திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில், மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி தலைமையில், தவயோகிகள் தவசிநாதன் சுவாமிகள், சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், சிவகாசி அதிபன்போஸ் ஆகியோா் முன்னிலையில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா மகா தீபத்தை ஏற்றிவைத்தாா்.

பின்னா், சாதுக்களுக்கு வஸ்திரதானம், காசு தானம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், தஞ்சாவூா் மண்டல பிராந்திய கலை மற்றும் கலாச்சார மைய உதவி இயக்குநா் ராஜாராமன், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், தொழிலதிபா் ராஜன், சன்மாா்க்க சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுந்தர்ராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை மாதாஜி ராதா, வடலூா் தெய்வ நிலைய அறங்காவலா் குழு உறுப்பினா் கிஷோா் குமாா், அறக்கட்டளை மேலாளா் பாலச்சந்திரன் மற்றும் மகா சித்தா்கள் அறக்கட்டளை மெய்யன்பா்கள் செய்திருந்தனா்.